கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் முறையீடு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் இன்று தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்தனர். உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் முறையீடு செய்தார். தலைமை நீதிபதி அமர்வில் அளித்த மனுவில் ரத்தினம் உள்பட 70க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த மனுவில், வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கதல்ல, பள்ளி மாணவி தற்கொலைதான் செய்துகொண்டார் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். நீதிபத்தில் இளந்திரையனின் கருத்து உச்சநீதிமன்றம் வகுத்துள்ள சட்ட விதிகளை மீறிய செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேறு ஒரு நாளில் முறையீடு செய்யுமாறு வழக்கறிஞர் ரத்தினத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மாணவி மரண வழக்கில் கைதான கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு நீதிபதி இளந்திரையன் ஆக.26-ல் ஜாமீன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…