கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு – குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி!

Published by
பாலா கலியமூர்த்தி

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி.

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவர வழக்கில் சிபிசிஐடி போலீசார் 1200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் 1,200 பக்க குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். சிபிசிஐடி ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மாணவி கொலை செய்யப்பட்டதற்கான நோக்கம் இல்லை, தற்கொலைக்கான முகாந்திரம் உள்ளது என குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பரில் கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணமடைந்ததை அடுத்து கலவரம் ஏற்பட்டது. மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடைபெற்றபோது, கலவரமாக வெடித்தது. இதில், பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளி வாகனம் வைத்து எரிக்கப்பட்டது.

இதன்பின் பள்ளி மூடப்பட்டு, சமீபத்தில் தான் மீண்டும் திறக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவர வழக்கில் சிபிசிஐடி போலீசார் 1200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

6 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago