Kallakurichi - ethanal [File Image]
விஷச் சாராய விவகாரம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் விஷச் சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாளுக்கு நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகள் அதிகாரித்து கொண்டே செல்கிறது.
நேற்று வரை 59 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியான நிலையில், இன்று சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஜான்பாட்ஷா என்பவர் உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.
விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில், 90 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் 111 பேர், விழுப்புரத்தில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 11 பேர், சேலத்தில் 29 பேர் என மொத்தம் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பென்சிலால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை, கௌதம், சிவக்குமார் ஆகிய 7 பேரும் மெத்தனாலை பெரிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கி தனி நபர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, கைது செய்யப்பட்ட 7 பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து அதிரடி நடவடிக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார். இதன் மூலம் விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 21 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தை சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொள்ள உத்தரவு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…