மாணவிகள் புகார் அளித்த மூன்று பேரையும் கலாஷேத்ராவுக்குள் அனுமதிக்க கூடாது என ஆணைய தலைவர் குமரி பேட்டி
சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் நடன பேராசிரியர் ஹரி பத்மன் , மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து தனிப்படை அமைத்து, ஹரி பத்மனை ஹைதிராபாத்தில் இருந்து சென்னை வந்த அவரை அவரது நண்பர் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ஆஜர்
இதனையடுத்து, மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக மாநில மகளிர் ஆணையத்தில் கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் ஆஜராகியுள்ளார். கலாஷேத்ரா இயக்குநரிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி விசாரணை நடத்தி வருகிறார்.
ஆணைய தலைவர் குமரி பேட்டி
விசாரணை நிறைவடைந்த பின் செய்தியாளர்களுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மாணவிகள் புகார் அளித்த மூன்று பேரையும் கலாஷேத்ராவுக்குள் அனுமதிக்க கூடாது என இயக்குனரிடம் கூறியுள்ளேன்.
கலாஷேத்ரா தொடர்பாக மேலும் சில ஆவணங்களை இயக்குனர் ரேவதியிடம் கேட்டுள்ளேன். மாணவிகளின் புகார் மீது கலாஷேத்ரா எடுத்த நடவடிக்கைகள் பற்றி இயக்குனரிடம் கேட்டறிந்தேன். போராட்டத்தில் மீண்டும் ஈடுபட உள்ள மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். கல்லூரியின் ஐசிசி கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து ஆவணங்களை வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…