கலைஞர் நினைவு நூலகம்! அடுத்த மாதம் 30-க்குள் 100% நிறைவு பெறும் – அமைச்சர் எ.வ.வேலு

Default Image

கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் 100% நிறைவு பெறும் என அமைச்சர் தகவல்.

சர்வதேசத் தரத்தில் ரூ.114 கோடி செலவில் மதுரையில் அமையவிருக்கும் கலைஞர் நினைவு நூலகக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மதுரை புது நத்தம் சாலையில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் 100% நிறைவு பெறும் என்று அமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மேலும், மதுரையில் ரூ.900 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில், முடிக்கப்பட்ட பணிகள் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். தேனி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஐந்து புறவழிச் சாலைகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்