தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வரும் 10ம் தேதி கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி நாளன்று,பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவும், சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும்,ஊர்வலமாக சிலைகளை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக,இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.மேலும், தடையை மீறி விநாயகர் சதுர்த்தி பண்டிகை பொது இடங்களில் கொண்டாடப்படும் என்றும் அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பப்பட்டு வருகின்றது.அந்த வகையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்து வாழ்த்து அட்டை அனுப்பியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:
“பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல, இளைஞர்களே! இதை தமிழக மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.ஏனெனில்,சிறுபான்மை மக்களிடம் பாஜக பற்றி ஒரு சந்தேகத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள் என்பது உண்மைதான்.அதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களாகிய உங்களுக்கு உள்ளது என்று டாக்டர்.கலைஞர் அவர்கள் பேசியது 23.06.1999 அன்று முரசொலி நாளிதழில் வந்துள்ளது.
முத்தமிழ் அறிஞரின் புதல்வருக்கு, தமிழக முதல்வருக்கு இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…