திமுக பவள விழாவில் கலைஞர் கருணாநிதி அருகே அமர்ந்த மு.க.ஸ்டாலின்.!

திமுக பவள விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவம் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் இருக்கையில் அமர்ந்திருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Tamilnadu CM MK Stalin - Kalaignar Karunanidhi

சென்னை : திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட நாள், தந்தை பெரியார் பிறந்த தினம் , அறிஞர் அண்ணா பிறந்தநாள் என இன்று திமுக முப்பெரும் விழாவானது சென்னை ஒய்.எம்.சி.ஆர் மைதானத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இந்த முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இதில், மேடையில் இரண்டு பெரும் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒரு இருக்கையில் திமுக தலைவரும் ,  தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அமர்வார் என அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்னொரு இருக்கையில் யார் அமர்வார்கள் என்ற கேள்வி பலர் மனதில் எழுந்தது.

அந்த சமயம் , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு வந்தார். அப்போது , மேடையில் இருந்த பெரிய இருக்கையில் AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அமர்ந்து இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டது. அருகே உள்ள பெரிய இருக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார்.

மு.க.ஸ்டாலின் அருகே திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவும், கலைஞர் கருணாநிதி காட்சிப்படுத்தப்பட்ட இருக்கைக்கு அருகே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அமர்ந்திருந்தார். AI தொழில்நுட்ப உதவியுடன் கலைஞர் கருணாநிதி, திமுக பவள விழாவுக்கு வாழ்த்து உரை கூறுவது போல காட்சிப்படுத்தப்பட்டது விழாவில் இருந்த அனைவரையும் வியக்க வைத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்