கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை… திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!

Published by
Muthu Kumar

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சென்னை கிண்டி கிங்க்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்திருக்கிறார். சென்னை கிண்டியில் 1000 படுக்கை வசதிகளுடன், 230 கோடி ரூபாய் செலவில் 15 மாதங்களில் இந்த கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 4.89 ஏக்கர் பரப்பளவில் இந்த கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 5 ஆம் தேதி குடியரசுத்தலைவர் அவர்களால் இந்த மருத்துவமனை திறந்து வைக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

கலைஞர் நூற்றாண்டு சிறப்பு விழா இந்த ஆண்டு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், இம்மருத்துவமனையை முதலவர் ஸ்டாலின், இன்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து திறந்து வைத்துள்ளார். இந்த திறப்பு விழாவில் அமைச்சர்கள் துரை முருகன், உதயநிதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Published by
Muthu Kumar

Recent Posts

பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!

காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…

14 minutes ago

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…

35 minutes ago

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

2 hours ago

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

3 hours ago

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…

4 hours ago

ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…

4 hours ago