தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களுக்கான இந்த இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் தொடங்கியது. இதில் 158 ஒன்றியத்திற்கும் ஊராட்சி மன்ற உறுப்பினர் , ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறும் வகையில் தமிழக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்தில் தனது வாக்கினை காலையிலேயே பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘ தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசு தான் அறிவித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக நினைத்திருந்தால் அவர்கள் ஆட்சிபுரியும் மாநிலங்களில் ஏதேனும் ஒன்றை அறிவித்து விடலாம். ஆனால், நிர்வாகத்தில் சிறப்பான பங்கை ஆற்றியதனால் தான் தமிழகத்திற்கு முதல் இடம் கிடைத்தது.
சீன அதிபரும், பிரதமர் மோடியும் தமிழகத்தில் சந்தித்து கொண்டது உலக வரலாறு. சீன அதிபர் கூட தமிழக நிர்வாகத்தை பாராட்டிதான் சென்றார். அப்போதெல்லாம் முக.ஸ்டாலின் வெளிநாடு சென்றாரா ?’ என பேட்டியில் தெரிவித்திருந்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…