திமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து கே.பி.ராமலிங்கம் திடீர் விடுவிப்பு! காரணம் என்ன?!

Default Image

தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொளி மூலம் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுகவை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பாக செயல்படுகிறது. இந்த ஊரடங்கு சமயத்தில் விவசாய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எனவும், 

இந்த ஊரடங்கு சமயத்தில் பேரிடா் மீட்பு பணிகளில் அரசியல் பாகுபாடின்றி மாவட்ட ஆட்சியா்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனையோடு அரசு செயல்படுவதுதான் சிறந்த வழிமுறையாக இருக்கும். அதை தவிர்த்து காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை அவசியமற்றது என தான் கருதுவதாகவும்.

மேலும், அவசியமான அத்தியாவசியமான கருத்துகள் இருந்தால் இணையதளம் மூலம் முதல்வருக்கு அனுப்பவேண்டும். ஊரடங்கு என்பது அரசியல் நடவடிக்கைகளுக்கும் சேர்த்துதான். என கே.பி.ராமலிங்கம் தெரிவித்து இருந்தார். 

கே.பி.ராமலிங்கம் திமுகவின் விவசாய அணி மற்றும் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். தற்போது அந்த பொறுப்புகளில் இருந்து அவர் விடுவிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
Chennai Super Kings vs Punjab Kings
ramadoss
Punjab won the toss and elected to field
Rajinikanth