நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் ,மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி- கே.பாலகிருஷ்ணன்

Default Image

நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தோழமை கட்சி தலைவர்களுக்கு    நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 12-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொரோனா காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இன்று கே.பாலகிருஷ்ணன்  குணமடைந்துள்ளார்.

இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 12ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான் இன்று குணமடைந்து இல்லம் திரும்பிவிட்டேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சையளித்த டீன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அதேபோல் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தோழமை கட்சி தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்