அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.இதனிடையே,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ளது.இதன்காரணமாக,சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது நாளாக நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.இந்த ஆலோசனையில்,துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன்,மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன்பின்னர்,ஓபிஎஸ்-வுடனான ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்:”அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அது செல்லாது தலைமையின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் தனியாக இன்று ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,ஓபிஎஸ் தரப்பில் இருந்து மாவட்ட செயலாளர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்,ஆனால் இருவரும் சேர்ந்து அழைத்தால்தான் தாங்கள் வருவோம் என்று சில மாவட்ட செயலாளர்கள் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.அதே சமயம்,ஒற்றைத் தலைமை குறித்து ஈபிஎஸ் ஆதரவாளர்களும் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,23-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் கொண்டு வரக்கூடிய தீர்மானங்கள் குறித்து சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானக்குழு இன்று இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர்…
கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…