அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் முன்னதாக சோதனை நடத்தியபோது அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டிருந்தது.அந்த வகையில்,கோவை வடவள்ளி பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் நண்பரான சந்திரசேகர் வீட்டில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது.
இந்த சூழலில்,கோவை வடவள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் நேற்றும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.ஏற்கனவே இரண்டு முறை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில்,நேற்று 3-வது முறையாக சந்திரசேகருக்கு சொந்தமான 6 இடங்களில் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையிட்டனர்.ஐடி சோதனைக்குள்ளான சந்திரசேகர் நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும் உள்ளார்.
இந்நிலையில்,சந்திரசேகருக்கு தொடர்புடைய கோவை பீளமேட்டில் உள்ள கேசிபி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,சோதனையின் முடிவிலேயே என்னென்ன ஆவணங்கள்,சோதனைக்கான காரணங்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…