#JustNow: ஓபிஎஸ் போஸ்டர்கள் கிழிப்பு – ஆதரவாளர்கள் போராட்டம்!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போஸ்டர் கிழிக்கப்பட்டதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் போராட்டம்.

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்று நேற்று நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் வலியுறுத்திய நிலையில், யார் அந்த ஒற்றை தலைமை என்பதை கட்சி குடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். ஒன்றை தலைமை பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி தான் என்று ஒருபக்கம் அவரது ஆதரவாளர்களும், மறுபக்கம்  ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவுக்கு ஒற்றை தலைமையாக இருக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதனால் கட்சியில் இருவேறு கருத்துக்கள் உலா வருவதாக தெரிகிறது. இந்த சமயத்தில், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது தொடர்பாக  இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே, அவரகத்து ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். எனவே, கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருவது, யார் அந்த ஒற்றை தலைமை பொறுப்பை கைப்பற்ற போகிறார்? என்பது  குறித்த பேச்சுவார்த்தையால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போஸ்டர் கிழிக்கப்பட்டதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவில் ஒற்றை தலைமையை ஓ.பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் ராயப்பேட்டை, அவரது இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை போஸ்டர் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நந்தனம், ராயப்பேட்டை இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருப்பதாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிட்டத்தட்ட 10 நிமிடம் மேலாக மறியல் போராட்டம் நடந்துள்ளது. பின்னர் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக கூறி தொண்டர்களை கலைந்து செல்ல வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதிமுக ஒன்றை தலைமை குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே ஆலோசனை நடத்தும் நிலையில், சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை இல்லத்தில் ஓபிஎஸ், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வரும் நிலையில், ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் கூறப்படுகிறது. எனவே, அதிமுக பொதுக்குழு, செயற்குழு 23-ஆம் தேதி கூடும் நிலையில், ஒற்றை தலைமை குறித்த விவாதம் சூடு பிடித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago