கஞ்சா விற்பனை தொடர்பாக தென் மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 1,450 வங்கி கணக்குகள் முடக்கம்.
கஞ்சா விற்பனை தொடர்பாக 10 மாவட்டங்களில் 831 வழக்குகளில் 1,450 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது என்று தென்மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஜி, கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த 3 மாதங்களில் ரூ.10 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பதிவான 8 வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது.
அதன்படி, 31 வீடுகள், 19 மனைகள், நிலங்கள், 5 கடைகள் மற்றும் 18 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக கூறினார். கஞ்சா விற்பனையை தடுக்க முன்னெச்சரிக்கையாக 1,000 பேரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டது. கஞ்சா, போதை வஸ்துகள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை கண்டறிந்து நன்னடத்துக்கான பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது.
மேலும், கூடலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எருமாடு காவல் நிலைய காவலர் அமரன் கைது செய்யப்பட்ட நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக காவலர்கள் உடையார், விவேக் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்றும் ஐஜி குறிப்பிட்டார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…