அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் மூலம் பென்சன் வழங்குவது சாத்தியமில்லை என அமைச்சர் அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்களுக்கு ஒருங்கிணைந்த பிரத்யேக கைபேசி செயலி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். அந்த செயலி மூலம் தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம், விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிப்பார்த்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதன்பின் பேசிய அவர், தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. புதிய ஓய்வூதியத் திட்டதில் ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என தெரிவித்தார். சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை புறநகர் மின்சார ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை இணைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை திருமங்கலத்தில் இருந்து அவதிக்கு மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் எனவும் கூறினார்.
மேலும், அரசாங்கத்தின் பணிகளில் நீதிமன்றம் அநாவசியமாக கை வைக்கக்கூடாது. நீதிமன்ற தீர்ப்புகள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. நீதித்துறை, அரசாங்கம், சட்டமன்றம் ஆகியவற்றின் எல்லை தெளிவு இல்லாமல் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தலைமையும், அதிகாரிகளும் சரியாக அமையவில்லை எனவும் குற்றசாட்டினார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…