சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கப்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் சோதனை நடக்கிறது. கிட்டத்தட்ட அவர் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
அதன்படி, சென்னையில் 10 இடங்களும், மதுரையில் சுமார் 30 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடிகர் விஜயின் பிகில் பட விவகாரத்தில் அன்புச்செழியன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தன. கடந்த 2020-ஆம் ஆண்டு அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதுபோன்று, தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடக்கும் நிலையில், சென்னை தி.நகரில் உள்ள கலைப்புலி எஸ் தாணு அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…