கொரோனா காலத்தில் அரசு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு.
கொரோனா கால செலவுகளை முன்னிட்டு அரசு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு நிகழ்வுகளில், அரசு அதிகாரிகளுக்கான மத்திய உணவு, இரவு உணவு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான செலவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. புதிய வாகனங்களை வாங்குவதற்கான தடை நீடித்தாலும், பழைய பழுதடைந்த வாகனங்களை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடிப்படை பயிற்சி, கொரோனா தொடர்பான பயிற்சி தவிர மற்ற அனைத்து பயிற்சிகளுக்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. புதிய கணிப்பொறிகள் வாங்க கூடாது என்ற தடை உத்தரவு நீக்கப்படுகிறது. ஆனால், அரசு அதிகாரிகள் மாநிலத்தை விட்டு வெளியே செல்ல விமான பயணம் மேற்கொள்ளக்கூடாது என்ற உத்தரவு தொடர்கிறது என்றும் தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், பரிசுப்பொருள், பூங்கொத்து, சால்வை, நினைவு பரிசுகளை அரசு செலவில் இருந்து வாங்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. 20 பேருக்கு மேல் பங்கேற்கும் மாநாடு, கருத்தரங்கம், கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக்கொள்ளப்படுகிறது. ஆனாலும், இவற்றை ஆன்லைன் மூலமாக நடத்துவது சிறந்தது என்றும் தமிழக அரசின் அரசாணையில் கூறியுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…