அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு தோல்வியடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகை உயர்வு.
அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுபோன்று, கருத்தடை செய்த ஒரு மாத காலத்திற்குள் உயிரிழந்தால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த கனிமொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார். கடந்த 2018-ஆம் ஆண்டு பாடி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகும் கர்ப்பமானதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின்பும் கருவுற்றதால் இழப்பீடு கோரிய வழக்கு தொடர்ந்திருந்தார்.
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…