#JustNow: குடும்பக் கட்டுப்பாடு… இழப்பீட்டுத் தொகை உயர்வு – தமிழக அரசு தகவல்

Default Image

அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு தோல்வியடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகை உயர்வு.

அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுபோன்று, கருத்தடை செய்த ஒரு மாத காலத்திற்குள் உயிரிழந்தால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

திருவள்ளூரை சேர்ந்த கனிமொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார். கடந்த 2018-ஆம் ஆண்டு பாடி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகும் கர்ப்பமானதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின்பும் கருவுற்றதால் இழப்பீடு கோரிய வழக்கு தொடர்ந்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்