#Justnow:சசிகலாவுக்கு அமைச்சர் பதவி;கைகோர்த்த திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம்!

Published by
Edison

சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் இணைக்கப்பட்டது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நீடித்து வந்த நிலையில்,நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ்,அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே,அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில்,கட்சிக்கு சசிகலா தலைமை ஏற்க வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.மேலும்,இது தொடர்பாக பல பகுதிகளில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.இதனைத் தொடர்ந்து,சசிகலா தலைமையிலான அதிமுகவுடன்,அண்ணா திராவிடர் கழகத்தை அக்கட்சி நிறுவனர் திவாகரன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில்,அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் அக்கட்சியின் நிறுவனர் திவாகரன் இணைத்துள்ளார். முன்னதாக,கடந்த 2018-ம் ஆண்டு சசிகலா சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார்.ஆனால், அக்கட்சியில் தனது பெயரையோ,படத்தையோ பயன்படுத்தக்கூடாது என சசிகலா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.இதைத்தொடர்ந்து,சசிகலா இனி தனது சகோதரி இல்லை’ என திவாகரன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்,சசிகலா தலைமையிலான தாய் கழக அதிமுகவுடன் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது,சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் அக்கட்சியின் நிறுவனர் திவாகரன் இணைத்துள்ளார்.மேலும்,அண்ணா திராவிடர் கழகம் சார்பில் சசிகலாவுக்கு செங்கோல் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,மேடையில் பேசிய திவாகரன்:”மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்,சசிகலாவுக்கு அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்க்க ஆசைப்பட்டார்.ஆனால் ஜெயலலிதாவின் உடல் நலனில் மட்டுமே அக்கறை கொண்டவராக சசிகலா இருந்தார்.கயல் சீரியலில் வரும் கயல் எப்படியோ? அது போல் தான் சின்னம்மா”,என்று கூறினார்.

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

32 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

38 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

55 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago