#JustNow: கோவையில் குண்டுவெடிப்பு – குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு!

Default Image

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு.

கடந்த 1998-ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வருபவர்களை பிடிக்க 3 தனிப்படைகளை சிபிசிஐடி போலீசார் அமைத்துள்ளனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள டெய்லர் ராஜா, முஜிப்பூர் ரகுமான் ஆகிய 2 பேரை பிடிக்க சிபிசிஐடி தீவிரம் காட்டி வரும் நிலையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த 1998-ஆம் ஆண்டு கோவையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்த நிலையில், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மூஸா மொய்தீன் உள்ளிட்ட 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அவர் அடைக்கப்பட்டனர். 24 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதாகவும், தங்களுக்கு கருணை அடிப்படையில் சில நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இவர்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
Imran khan
IPL 2025 - Rohit sharma
MI vs KKR - IPL 2025
raj thackeray
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan