ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது குறித்து வரும் 13ம் தேதி போக்குவரத்துறை ஆலோசனை.
தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மே 13ம் தேதி) நடைபெறும் என்று போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம் தொடர்பாக போக்குவரத்து ஆணையர் தலைமையில், ஆலோசனை நடைபெறும் என போக்குவரத்துறை இணை ஆணையர் அறிவித்துள்ளார்.
தொழிற்சங்கம், அரசு அதிகாரிகள் கொண்ட குழுவுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2013-ஆம் ஆண்டு ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அப்போது குறைந்தபட்ச கட்டணமாக 25 ரூபாய் வசூலிக்க வேண்டும். இதன்பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 10 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், அதற்கு பின்னர் ஆட்டோ மீட்டர் கட்டணம் முறையாக பொதுமக்களிடம் வசூலிக்கவில்லை என புகார்கள் எழுந்திருந்தது. சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில், ஆட்டோ மீட்டர் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை ஏற்ப மாற்றியமைக்க நடவடிக்கைகள் ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தது.
முறையாக கட்டணம் நிர்ணயம் செய்து, முறையாக கட்டண வசூலிக்கப்படுகிறதா என்பதை குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், இதுதொடர்பான ஆலோசனை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…