ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது குறித்து வரும் 13ம் தேதி போக்குவரத்துறை ஆலோசனை.
தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மே 13ம் தேதி) நடைபெறும் என்று போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம் தொடர்பாக போக்குவரத்து ஆணையர் தலைமையில், ஆலோசனை நடைபெறும் என போக்குவரத்துறை இணை ஆணையர் அறிவித்துள்ளார்.
தொழிற்சங்கம், அரசு அதிகாரிகள் கொண்ட குழுவுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2013-ஆம் ஆண்டு ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அப்போது குறைந்தபட்ச கட்டணமாக 25 ரூபாய் வசூலிக்க வேண்டும். இதன்பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 10 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், அதற்கு பின்னர் ஆட்டோ மீட்டர் கட்டணம் முறையாக பொதுமக்களிடம் வசூலிக்கவில்லை என புகார்கள் எழுந்திருந்தது. சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில், ஆட்டோ மீட்டர் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை ஏற்ப மாற்றியமைக்க நடவடிக்கைகள் ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தது.
முறையாக கட்டணம் நிர்ணயம் செய்து, முறையாக கட்டண வசூலிக்கப்படுகிறதா என்பதை குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், இதுதொடர்பான ஆலோசனை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…