12-ம் வகுப்பு ஆங்கில பாட தேர்வில் 3 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்.
தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 5ம் தேதி 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற 12-ம் வகுப்பு ஆங்கில பாட தேர்வில் 3 மாணவர்கள் முறைகேடு ஈடுபட்டதாக பிடிபட்டுள்ளனர் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் என்று 3 பேர் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு பிடிபட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழகத்தில் பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பு அரசு தேர்வுகள் இயக்ககம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி மற்றும் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும் என்றும் பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…