பாலியல் தொல்லை புகாரில் கைதாகி சிறையிலுள்ள ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் போக்சோ வழக்கில் கைது செய்யப்படுள்ளார்.
ஏற்கனவே 19 வயது பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடைப்படையில் கெபிராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த மே 30 -ஆம் தேதி கெபிராஜ் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
பின்னர், சிபிசிஐடி போலீசார் இரண்டு நாட்கள் கெபிராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.இதற்கிடையில், கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணையும் போலீசார் வெளியிட்டார்கள். புகார் கொடுப்பவர்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து, சமீபத்தில் ஒரு பெண் ஒருவர் கெபிராஜ் மீது அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில், பாலியல் தொல்லை புகாரில் கைதாகி சிறையிலுள்ள ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் போக்சோ வழக்கில் கைது செய்யப்படுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…