“இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை” – தமிழக நிதியமைச்சர் பிடிஆர்!

Default Image

இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்களுக்கு சட்டப் புத்தகம் வழங்கும் விழா,சென்னை உயர்நீமன்றதில் உள்ள பார் கவுன்சிலில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து,விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி:”வழக்கறிஞர்களின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும்.திமுக ஆட்சிக்கு வருகிறபோது எல்லாம் நாங்கள் மறப்பது இல்லை.ஏனெனில்,நங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது உறுதுணையாக இருந்தவர்கள் வழக்கறிஞர்கள்தான்”,என்றும் மாநில அரசுகளின்

அவரைத் தொடர்ந்து,நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்:”நீதித்துறையில் சிறப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.மாநில அரசிடம் உள்ள அதிகாரங்களை கொண்டு நீதித்துறையில் நல்ல மாற்றங்களை செய்ய முடியும்.நிர்வாகமும், சட்டம் ஒழுங்கும் சரியாக இருந்தால் பொருளாதாரம் உயரும்.

மேலும்,மெடிக்கிளைம் திட்டத்தில் வழக்கறிஞர்களை இணைப்பது ஒரு பெரிய விஷயமில்லை.வழக்கறிஞர் மருத்துவக்காப்பீட்டு திட்டம் குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்