தந்தை மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Default Image

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் வெயில்முத்து ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை முதலாம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உட்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரித்தனர்.

அதன்பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்தும்போது, ஆய்வாளர் ஸ்ரீதருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  இதனால் தன்னை மருத்துவமனையில் சிகிக்சை பெற அனுமதிக்கவேண்டும் என நீதிபதியிடம் அவர் தெரிவித்தார். அதன்படி, நீதிபதி சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தினார். மேலும், அவரை மதுரை மத்திய சிறையில் இருந்து மதுரை ராஜாஜி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது.

இந்நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் வெயில்முத்து ஆகியோர் மதுரை முதலாம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு இன்று மதுரை முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இருவரின் ஜாமின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk