Election Breaking: பெரம்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்

Default Image

தமிழகம் முழுவதும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. திமுக,அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் நல்ல போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் பெரம்பூர்  வாக்கு எண்ணும் மையத்திற்கு வடசென்னை மக்களவை வாக்கு இயந்திரமும் வடசென்னை மையத்திற்கு பெரம்பூர் வாக்கு இயந்திரமும் தவறாக வந்ததால் வாக்கு எண்ணும்  மையத்தில் உள்ள முகவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. அங்குள்ள கட்சி முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும்  அலுவலர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் வாக்கு எண்ணும்  மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்