பாலியல் வழக்கில் தாளாளர் ஜோதிமுருகனுக்கு ஜாமீன்..!

Published by
murugan

தனியார் நர்ஸிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தாளாளர் ஜோதிமுருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் அடுத்துள்ள முத்தனம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் நர்ஸிங் கல்லூரியின் தாளாளா் ஜோதிமுருகன் மீது மாணவிகள் பாலியல் புகாா் அளித்தனர். புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தாளாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலை மறியல் ஈடுபட்டனா். போலீசார் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் ஜோதிமுருகனை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர். 2 நாள்கள் மாணவா்கள் நடத்திய போராட்டத்துக்குப் பின் அந்த கல்லூரிக்கு மாவட்ட நிா்வாகம் சீல் வைத்தது. விடுதியில் தங்கியிருந்த மாணவா்களும் சொந்த ஊா்களுக்கு சென்றனா்.

இதனைத் தொடர்ந்து தலைமறைவான ஜோதிமுருகனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஜோதிமுருகன், திருவண்ணாமலை அருகே போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், பாலியல் வழக்கில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவலை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் வழங்கியது.

 இந்நிலையில், தனியார் நர்ஸிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தாளாளர் ஜோதிமுருகனுக்கு ஜாமீன் வழங்கி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க ஜோதிமுருகனின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், ஜோதிமுருகன் நாள்தோறும் வட மதுரை காவல்நிலையத்தில் கையெழுத்திடவும் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது.

 

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…

2 hours ago

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

8 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

9 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

14 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

1 day ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago