#JobAlert : சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Published by
murugan

சென்னை மாநகராட்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபட வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று மட்டும் சென்னையில் அதிகபட்சமாக 4,640 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள மருத்துவ அலுவலர்கள் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விருப்பம் உள்ள, தகுதி உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் நேரடியாக, கல்வித்தகுதி உள்ளிட்ட அசல் சான்றிதழ்களுடன் 29.04.2021 மற்றும் 30.04.2021 (காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) நடைபெற உள்ள நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

பணியிடங்கள்:

மருத்துவ அலுவலர்கள் (Medical Officer) -150 பேர்

செவிலியர் (Staff Nurse) – 150 பேர்

ஊதியம்:

மருத்துவ அலுவலர்கள் – ரூ.60,000/-

செவிலியர் -ரூ.15,000/-

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

3. பணியில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் (undertaking) அளிக்க வேண்டும்.

நேர்காணலுக்கு வர வேண்டிய முகவரி :

சென்னை மாநகர நல சங்கம், பொதுசுகாதாரத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, சென்னை – 600003.

 

Published by
murugan

Recent Posts

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

3 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

12 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago