தமிழ்நாட்டில் 4 பேருக்கு JN-1 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா!

Published by
கெளதம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தின் படி இந்தியாவில் 312 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் 4 பேருக்கு JN-1 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 63 பேருக்கு JN-1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவாவில் 34 பேருக்கும் மகாராஷ்டிராவில் 9 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் வலியுறுத்தியிருக்கிறார்.

4000-ஐ கடந்த கொரோனா.! 24 மணிநேரத்தில் 312 பேருக்கு பாதிப்பு.!

உலகளவில் அதிகம் பரவும் JN1 வகை கொரோனா தமிழ்நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Recent Posts

கதை சொன்ன மனோஜ்..கேட்டுவிட்டு கெட்டவார்தையில் திட்டிய தயாரிப்பாளர்…? நடிகர் சொன்ன உண்மை!

சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…

11 minutes ago

“ரொம்ப முயற்சி செய்தான்.. ஆனால் இறைவன் பறிச்சிட்டான்” வருத்தத்தோடு கூறிய ⁠எம்.எஸ்.பாஸ்கர்.!

 சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள…

19 minutes ago

‘அரசு ஊழியர்களுக்கு ஏப்.2ஆம் தேதி ஊதியம்’ – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு…

1 hour ago

“அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும்” – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து…

1 hour ago

எனக்காக யுவராஜ் சிங் வெயிலில் நின்றார்! ரமன்தீப் சிங் எமோஷனல்!

கொல்கத்தா : நைட் ரைடர்ஸ் (KKR) அணியைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ரமன்தீப் சிங். இவரை இந்த ஆண்டு கொல்கத்தா அணி…

2 hours ago

நாளை முதல் சமையல் கியாஸ் தட்டுப்பாடு? காலவரையற்ற ‘ஸ்ட்ரைக்’ அறிவிப்பு!

சென்னை : மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்துள்ளன. அதன்படி, டேங்கர்…

3 hours ago