தமிழகத்தின் புதிய டிஜிபி யாக ஜே.கே திரிபாதி பதவியேற்றுக் கொண்டார்!

Default Image

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக இருந்த டி.கே ராஜேந்திரன் பதவிக்காலம் இன்றுடன் முடிந்ததை அடுத்து தமிழகத்தின் 29 வது டிஜிபி யாக ஜே.கே திரிபாதி அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரிபாரதி அவர்கள், 1985 ம் ஆண்டு ஐபிஸ் பிரிவில் தேர்ச்சி அடைந்தவர். காவல்துறையின் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டு வந்த திரிபாரதி அவர்கள் தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும், சென்னை மாநகரத்தின் ஆணையராக தொடர்ந்து இரண்டு முறையும் , தென் மண்டல ஐஜி , சிறைத்துறை ஐஜி என்று காவல்துறையின் செயல்பட்டு வந்தவர். சிறைத்துறை தலைவராக இருந்த போது கைதிகளுக்கு சமூக அந்தஸ்து பெற்று தர உறுதியுடன் செயல்பட்டவர் திரிப்பாதி.
காவல் துறையில் தொடர்ந்து செயல்பட்டு வந்த எனக்கு இந்த பொறுப்பு வழங்கியதற்கு மிக்க நன்றி என்று திரிபாதி அவர்கள் கூறியுள்ளார். முன்னதாக முன்னாள் டிஜிபி தனது ஆவணங்கள் அனைத்தையும் டிஜிபி திரிபாதி அவர்களிடம் ஒப்படைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்