தந்தை-மகன் கொலை வழக்கில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது சாத்தான்குளம் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர் என சிபிஐ மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உட்பட 10 போலீசாரை கைது செய்தனர்.
இந்நிலையில் ஆய்வாளர் ஸ்ரீதர், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சிபிஐ தரப்பில் வாதங்கள் நடந்தது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியாமல் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிஸ் மீது பொய் வழக்கு பதியப்பட்டிருக்காது என தெரிவித்தனர்.
மேலும், பொறுப்பு அதிகாரி என்கிற வகையில் ஸ்ரீதருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது எனவும், இதன்காரணமாக அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என உரையாடினார்கள். மேலும், இந்த ஜாமீன் மனு மீதான வழக்கை வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…