#ஜெ.மரணம்:விசாரணையை முடித்த ஆறுமுகசாமி ஆணையம் – தமிழக அரசு போட்ட உத்தரவு!

Default Image

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக பல்வேறுசர்ச்சைகள் எழுந்த நிலையில்,அவரது மரணம் குறித்து விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு,ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.அதன்படி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து,3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக,அண்மையில் மீண்டும் விசாரணையை தொடங்கிய நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.

சசிகலா மட்டுமே உடனிருந்தார்:

அதன்படி நடைபெற்ற விசாரணையின்போது இளவரசி கூறுகையில்: ”அப்பல்லோ மருத்துவமனையில்,ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார் எனவும்,75 நாட்களும் மருத்துவமனைக்கு தான் சென்று வந்ததாகவும்,ஆனால் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாகவும் ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியதாக தகவல் வெளியாகியது.

ஜெயலலிதா,அப்பல்லோ மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார்?:

அவரைத் தொடர்ந்து,ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததை தவிர வேறு உபாதைகள் அவருக்கு இருந்தது தனக்கு தெரியாது என்றும் 2016 ஆம் ஆண்டு செப்.22 ஆம் தேதி ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார்? என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று தனக்கு தெரியாது என ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்திருந்தார்.

மறுவிசாரணை:

இதனைத் தொடர்ந்து,அப்பல்லோ மருத்துவர்களிடம் மறுவிசாரனையை ஆறுமுகசாமி ஆணையம் நடத்தியது.அதன்பின்னர்,ஜெ.மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் இறுதி அறிக்கை தயார் செய்து அரசிடம் ஒப்படைக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.

தமிழக அரசு உத்தரவு:

இந்நிலையில்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை முடித்துள்ள நிலையில்,இறுதி அறிக்கையை தயார் செய்ய மேலும் ஒரு மாதம் 9 நாட்கள் காலஅவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூன் 24 ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில்,மேலும்,கால அவகாசம் வழங்கப்பட்டு ஆக.3 ஆம் தேதி இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்