5 சவரன் நகை கடன் தள்ளுபடி என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது நூற்றுக்கு நூறு உண்மை என முதல்வர் தெரிவித்தார்.
தமிழக அரசு பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 5 சவரனுக்கு கீழ் வைத்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற திமுக வாக்குறுதி என்ன ஆனது..? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 5 சவரனுக்கு உட்பட்டுள்ள தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என ஆதாரத்துடன் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். 5 சவரன் நகை கடன் தள்ளுபடியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
5 சவரன் நகை கடன் தள்ளுபடி என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது நூற்றுக்கு நூறு உண்மை. திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என கருதி மக்கள் நகைகடன்களை பெற்றனர். நகைக் கடன் தள்ளுபடியில் முறைகேடுகள் நடந்ததை எதிர்க்கட்சித் தலைவர் ஆதரிக்கிறாரா..? தகுதி உடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என பதிலளித்தார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…