அரசின் அறிவுறுத்தலை மீறி வட்டி செலுத்த வற்புறுத்தினால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இறுதிப்பட்டியல் பயனாளிகள் அறிந்துகொள்ளும் வண்ணம் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை உள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குப் பின் தற்போது வரை அந்த நகைகளுக்கு செலுத்தப்பட வேண்டிய வட்டியை அரசே செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்கள் என்றும், அரசின் அறிவுறுத்தலை மீறி வட்டி செலுத்த வற்புறுத்தினால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவு கடந்த…
சென்னை : தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர்…
துபாய் : 37 வயதான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு குறித்த தகவல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஓடி…
சென்னை : சென்னை ராயப்பேட்டை YMCA அரங்கில் தவெக சார்பில் இன்று மாலை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில்…
திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர்…