முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆண்டு இறந்தார் இதில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள மூத்த மருத்துவர்களிடம் கலந்தாலோசித்ததாக அப்போலோ மருத்துவர் கூறியுள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒரே நாளில் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், சிகிச்சை தொடர்பாக அமெரிக்காவில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக அப்பலோ மருத்துவர் செந்தில்குமார் சாட்சியம் அளித்தார் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட உணவுகளால் மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் அதனால் அவர் உயிரிழக்கவும் இல்லை என்றும் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஷ்வரி கூறியதாக ராஜசெந்தூர் பாண்டியன் குறிப்பிட்டார்.
ஆணையத்தின் செயலளர் கோமளாவை மாற்ற வேண்டுமென்றும் மனு என அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும்ஜெயலலிதாவுக்கான சிகிச்சை தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள மூத்த மருத்துவர்களிடம் கலந்தாலோசித்ததாக அப்போலோ மருத்துவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று டாக்டர் சிவகுமாருக்கு 5 வது முறையாக சம்மன் அனுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…