#BREAKING: ஜெயலலிதா மரணம்: ஓபிஎஸ்ஸிடம் விரைவில் விசாரணை!

Published by
murugan

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் கருத்துகளை தெரிவித்தனர்.
இதனால், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிரா‌க அப்போலோ மருத்துவமனை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம்  விசாரணைக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்ப்பு அப்போலோ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

மேலும், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவு 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவர்கள் குழுவை எய்ம்ஸ் நியமித்தது. இதன் காரணமாக ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், நேற்று முதல் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. வரும் 15-ஆம் தேதிக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திக்கு சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2 தினங்களாக அப்போலோ மருத்துவரிகளிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. வரும் 21ம் தேதி நேரில் ஆஜராக பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
murugan

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

10 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

10 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

11 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

11 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

11 hours ago