ஜெயலலிதா மரணம்: உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் ஓபிஎஸ் – சசிகலா

Published by
பாலா கலியமூர்த்தி

கடவுளுக்கு தெரிந்த உண்மை நேற்று ஓபிஎஸ் மூலம் மக்களுக்கும் தெரிந்து விட்டது என சசிகலா பேட்டி.

சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் நேற்று 2வது நாளாக விசாரணை நடத்தியது. அப்போது, ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை என்றும் சசிகலா மீது மரியாதை அபிமானம் வைத்திருப்பதாகவும் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்திருந்தார்.

ஓபிஎஸ் உண்மையை கூறியிருக்கிறார்:

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உண்மையை தான் கூறியிருக்கிறார் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, என் மீது மதிப்பு இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் உண்மையை சொல்லியிருக்கிறார்.

ஆணையம் ஆரம்பித்தது நல்லதுதான்:

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், உண்மை என்ன என்பது குறித்து எனக்கும், பொதுமக்களுக்கும் தெரிய வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆறுமுகசாமி ஆணையம் ஆரம்பித்தது நல்லதுதான். கழகத்தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கும்.

நேற்று வெளியான உண்மை:

ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ்-க்கு தெரிந்த உண்மை, நேற்று மக்களுக்கும் தெரிய வந்துள்ளது. உண்மைகள் காலதாமதமாக வரலாமே தவிர, அதை மாற்றவோ, மறைக்கவோ முடியாது. பொதுமக்களும் உண்மையைத் தெரிந்துக்கொள்ள வேண்டும் என நான் நினைத்து சொல்லி வந்தேன். நேற்றைய நிகழ்வுகள் அதை நிருபித்துள்ளது. ஓபிஎஸ் உண்மைச் சொல்லியிருக்கிறார். என்னுடைய அடுத்த செயல்பாடுகள் நிதானமாக இருக்கும் என்றும் சசிகலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

12 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

13 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

14 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

14 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

15 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

16 hours ago