ஜெயலலிதா மரணம்..!ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரிக்க கூடுதல் அவகாசம் கேட்க முடிவு ..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரிக்க கூடுதல் அவகாசம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், மேலும் சில மாதம் அவகாசம் கேட்டு, தமிழக அரசுக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட அவகாசம் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடியவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.