ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாத காலம் கால அவகாசம் நீட்டிப்பு!!

Default Image

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாத காலம் கால அவகாசம் நீட்டிப்பு.

கடந்த 2017ம் ஆண்டு செப்.25-ல் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில், 11வது முறையாக 6 மாதம் கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 26 மாதங்களாக முடங்கியுள்ள ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்திற்கு 11வது முறையாக மேலும் 6 மாதம் கால நீட்டிப்பு செய்யபட்டுள்ளது.  கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், ஆணையம் ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்