ஜெயலலிதாவின் உதவியாளரிடம் 2-வது நாளாக இன்றும் விசாரணை….!

Default Image

2-வது நாளாக இன்றும் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். 

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக யார், யாரிடம் விசாரிக்கப்படாமல் இருந்தார்களோ, அவர்களை தற்போது தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுவரை சசிகலா, விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி,  சஜீவன் உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நேற்று  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, 2-வது நாளாக இன்றும் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்