அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான்..! இரட்டை இலை ஒரு மேஜிக் இலை..! – முன்னாள் ஜெயக்குமார்

Default Image

யாரோ சிலர் பொதுச்செயலாளர் என்று கூறுவதால் அவர் தலைவாராக முடியாது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான், இதனை யாரும் மாற்ற முடியாது; இரட்டை இலை ஒரு மேஜிக் இலை, அதனால் தான் அதிமுக இன்னும் பெரிய கட்சியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், காரில் அதிமுக கொடியை கட்டி வரும் சசிகலா மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். யாரோ சிலர் பொதுச்செயலாளர் என்று கூறுவதால் அவர் தலைவாராக முடியாது.  அதிமுகவுக்கு கூட்டணி கட்சிகள் சில  வருவதும்,போவதும் அவரவர் விருப்பம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்