மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்ல விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது செல்லாது என தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, ‘வேதா நிலையம் இல்லம் நினைவு இல்லமாக மாற்ற முந்தைய அதிமுக அரசு அவசர சட்டம் பிறப்பித்த பிறகு வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்தியது.
இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான, தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்று அறிவித்ததுடன், மூன்று வாரத்தில் வீட்டின் சாவியை தீபா, தீபக்கிட்டும் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் 4 ஆண்டுகளுக்கு பிறகு தீபா, தீபக்கால் திறக்கப்பட்டது. இதன்பின் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில், இதுதொடர்பாக மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்ல விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…