ஜெயலலிதா வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள மறுத்துவிட்டதாக சசிகலா பேட்டி.
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின் சசிகலா செய்தி அவர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநாட்டு மருத்துவர்கள் அவருக்கு வந்து சிகிச்சை அளித்த நிலையில், ஜெயலலிதா வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து ஜெயலலிதா சென்னையே மருத்துவ தலைநகரம் தான், அதனால் வெளிநாடு வேண்டாம் என கூறியதாகவும், டிசம்பர் 19ஆம் தேதி ஜெயலலிதாவின் ரீசார்ஜ் செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ், அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், ஆறுமுகசாமி ஆணையத்தில் எனது தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். நான் யார் பக்கமும் இல்லை. அனைவருக்கும் பொதுவான நபராகவே செயல்படுகிறேன். அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை தொடங்கிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…