வெளிநாட்டு சிகிச்சைகள் வேண்டாம் என ஜெயலலிதா தான் மறுத்தார்.! சசிகலா பேட்டி.!

Default Image

ஜெயலலிதா வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள மறுத்துவிட்டதாக சசிகலா பேட்டி. 

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின் சசிகலா செய்தி அவர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  வெளிநாட்டு மருத்துவர்கள் அவருக்கு வந்து சிகிச்சை அளித்த நிலையில், ஜெயலலிதா வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து ஜெயலலிதா சென்னையே மருத்துவ தலைநகரம் தான், அதனால் வெளிநாடு வேண்டாம் என  கூறியதாகவும், டிசம்பர் 19ஆம் தேதி ஜெயலலிதாவின் ரீசார்ஜ் செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ், அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், ஆறுமுகசாமி ஆணையத்தில் எனது தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். நான் யார் பக்கமும் இல்லை. அனைவருக்கும் பொதுவான நபராகவே செயல்படுகிறேன். அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை தொடங்கிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்