திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட ஜெயக்குமார்..!

Default Image
கடந்த மாதம் 21-ம் தேதி திமுக நபரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர், சாலை மறியல் , நில அபகரிப்பு உள்ளிட்ட மேலும் 2 வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். திமுக நபரை தாக்கிய வழக்கு, சாலை மறியல் செய்த வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை  சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

திருச்சியில் இரண்டு வாரம் தங்கியிருந்து ஜெயக்குமார் காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்