“எச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான பதில் அளித்துவிட்டார்”- முதல்வர் பழனிச்சாமி!

Published by
Surya

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான பதில் அளித்துவிட்டார் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்தவும், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது. இந்தநிலையில், விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி தர வேண்டும் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே வருகின்றனர்.

அதில் ஒரு பங்காக, அண்மையில் பாஜக மாநில தலைவர் முருகன், தமிழக முதல்வர் பழனிசாமியிடம் நேரில் சென்று அனுமதி கேட்டுள்ளார். மேலும், பாஜக தலைவர்கள் சிலர், சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழக அரசை விமர்சித்தும் வருகின்றனர்.

இந்தநிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அவரின் ட்விட்டர் பக்கத்தில் “கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு” என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு, பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் எச்.ராஜாவைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இதன்காரணமாக, நேற்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகனவினரை எச்.ராஜா உரசி பார்க்கக் கூடாது எனவும், எச்.ராஜா பற்றி உங்களுக்கே தெரியும். ஒரு டிவீட் போட்டு ஓடி ஒளிந்து கொண்டவர்கள் ஆண்மை உள்ளவர்களா? எனவும், அட்மின் ட்வீட் போட்டார் என்று சொன்னது ஆண்மை உள்ள செயலா? தன் முதுகை முதலில் பார்க்க வேண்டும். நீதிமன்றத்தில் கூனி குறுகி மன்னிப்பு கேட்டது ஆண்மை உள்ள செயலா? என அந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக நாமக்கலில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமாரே காட்டமான பதில் அளித்துவிட்டார் என கூறினார். மேலும் அவர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, அரசு விழாக்களில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் எனவும், அதற்க்கு யாருக்கும் தடையில்லை என கூறினார்.

Published by
Surya

Recent Posts

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி! 

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

21 minutes ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

3 hours ago

AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…

4 hours ago

10 இல்ல… இன்று 11 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…

4 hours ago

”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!

சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…

6 hours ago

“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!

சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…

6 hours ago