ஜல்லிக்கட்டு : நாட்டு மாடுகளுக்கு மட்டும் அனுமதி…! நீதிமன்ற உத்தரவிற்கு வரவேற்பு தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்…!

Default Image

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவிற்கு வரவேற்பு தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

நாட்டு மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க தமிழக அரசுக்கு, இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதற்கு வரவேற்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன்!வெளிநாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனுமதிக்க  கூடாதெனவும்,நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற உத்தரவும் முக்கியத்துவம் வாய்ந்தது!’ என  பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்