பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கமானது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி அந்த போட்டி தான்.
அதனை தொடர்ந்து அடுத்ததாக மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைத்திங்கள் அன்று (அதாவது ஜனவரி 15-ம் தேதி) நடைபெற உள்ளது. அதைப்போல, பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்றால் போட்டி நடைபெறுவதற்கு 20 நாட்களுக்கு முன்பே விண்ணப்பம் செய்துகொள்ளவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் 17 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி கோரப்பட்டு இருந்தது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புதிய மைதானத்துக்கு இதுதான் பெயர்!
இதனையடுத்து, திருச்சியில் எந்தெந்த இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்பதற்கான விவரமும் அதற்கான தேதியும் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 16-ல் சூரியூரிலும், ஜனவரி- 19 ஆம் தேதி நவலூர் குட்டப்பட்டு மற்றும் மணப்பாறையிலும் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். மேலும், 17 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி கோரப்பட்டு இருந்த நிலையில் 3 இடங்களில் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 இடங்களில் அனுமதி அளிக்கப்படவில்லை.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…